உள்நாட்டு செய்திகள்

சமூக ஊடகங்களால் திண்டாடும் தேர்தல் திணைக்களம்

சமூக ஊடகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தேர்தல் பிரச்சாரங்களைத் தடுக்க வழியின்றி தேர்தல்கள் திணைக்களம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

எதிர்வரும் 17ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் யாவும், எதிர்வரும் 14ஆம் நாள் நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும்.

ஆனாலும், சமூக ஊடகங்கள் வழியான பரப்புரைகளை தேர்தல் திணைக்களத்திளால் தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, டுவிற்றர், முகநூல்(facebook) வழியான பிரசாரங்கள், எதிர்வரும் 14ஆம் நாளுக்குப் பின்னரும் தொடர்வதை தடுக்க முடியாதிருக்கும் என்று தேர்தல்கள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தேர்தல் சட்டங்கள் சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்துவதற்கேற்றவாறு அமைக்கப்படவில்லை. இந்நிலையில், பரப்புரைக் காலம் முடிந்த பின்னரும், இணையவழிப் பரப்புரைகள் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இணையவழிப் பரப்புரைகள் வெற்றியைத் தீர்மானிக்கும் திறன்கொண்டதாக இருக்கும் என்று நம்பவில்லை என்று தேர்தல்கள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

(riz)

Related posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு LED மின்குமிழ்கள்..

wpengine

திருத்தப்பட்ட வற் வரிச் சட்ட மூலம் இன்று நாடாளுமன்றில்..

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியூடாக ஹோமாகம பகுதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine