Top Story 2உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயு விலை அதிகரிக்காது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்படாத நிலையில், சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கான அவசியமில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் சந்தை தொடர்பில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரிசி, தேங்காய், பால் மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு, மரக்கறி மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றிற்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமரின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

இதுவரை 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது

wpengine

ஆஸி.வீரர் பிராட் ஹாடின் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு

wpengine

சம்பிக்கவின் ஜீப் வண்டியில் மோதுண்ட இளைஞனுக்கு நினைவு மீண்டது

wpengine