உலக செய்திகள்

சிரியாவில் அரசுப்படைகளின் தாக்குதல் – 250 பேர் உயிரிழப்பு…

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசுப்படையினர் நடத்திய தாக்குதலுக்கு 250-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அரசு ஆதரவுப்படையினர் இதுவரை இல்லாத அளவுக்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 2013-ம் ஆண்டுக்கு பிறகு அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க உளவு அமைப்பு ஆயுத உதவிகளை நிறுத்தியதால் கிளர்ச்சியாளர்கள் பல இடங்களில் வீழ்ந்து வருகின்றனர்.

இந்த சூழலை சாதகமாக கொண்டு விரைவில் போராளிகளை அழிக்கும் நோக்கில் அரசுத்தரப்பு கூட்டுப்படையினர் கிழக்கு கூத்தா பகுதிகளில் வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில், சிக்கி 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக போர் மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

நேற்று(20) நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் கூடுதலாக 10 வயதுக்கும் குறைவானவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில நாட்கள் இதே போன்ற தாக்குதல் தொடர்ந்தால் பொதுமக்கள் உயிரிழந்தோர் எண்ணிக்கை கனிசமாக உயரும் என அச்சம் எழுந்துள்ளது.

Related posts

சீன அதிபராக ஜி ஜின்பிங் 2-வது தடவையாக இன்று பதவி ஏற்றார்…

wpengine

புளோரிடாவில் துப்பாக்கி சூடு- 2 பேர் உயிரிழப்பு…

wpengine

உலகின் மிகநீண்ட கடல்பாலம் நாளை திறப்பு…

wpengine