உள்நாட்டு செய்திகள்

சீரற்ற காலநிலை – நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு…

நாட்டின் நிலவுகின்ற கடும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாச்சதுவ, இராஜாங்கனை, மவ்ஆர, தியவெவ மற்றும் வெஹரகல நீர்த் தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் தெதுரு – ஓயா, நாலந்த, தப்போவ, மெடியாவ, மாகல்ல தம்பராவ மற்றும் அம்பேவல உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் நேற்று மாலை திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Related posts

அழிவடைந்துவரும் “பந்துல பெத்தியா” மீன்கள் – பாதுகாக்க விசேட வேலைத்திட்டம்

Azeem Kilabdeen

அழைப்புக் கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை ஜனாதிபதியிடம் கோரிக்கை..

wpengine

இன்றும் சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பு

wpengine