உள்நாட்டு செய்திகள்

சுமார் 115 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

(FASTNEWS|COLOMBO) – சுட்டிக்குளம் சாளை பகுதியில் வைத்து இன்று(05) காலை வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட சுமார் 115 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகன சாரதி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைத்து மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

wpengine

ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஞானசார தேரர் ஜப்பான் பயணிக்கவில்லை – ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை…

wpengine

A/L பெறுபேற்றில், முதல் மூன்றிடங்களை பெற்ற மாணவர்கள் விவரம்..

wpengine