உள்நாட்டு செய்திகள்

சுமார் 161 கிலோ ஹெரோயினுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) மொறட்டுவை – ராவத்தாவத்தை பகுதியில் 161 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹெரோயின் சுமார் 1800 மில்லியன் ரூபா பெறுமதியுடையது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெருந்தொகையான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

500 கோடி பெறுமதியான வைரக்கல்லுடன் கைது செய்யப்பட்ட கெலும் இந்திக்க என்பவரின் வீட்டில் இருந்து குறித்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

வளர்ப்புப் புறாக்களின் ஊடாக போதைப்பொருள் கடத்தும் முயற்சி – கல்முனைப் பிரதேசத்தில் அவலம்..!

wpengine

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் அதிகரிக்கும் இலக்கு..

wpengine

ஏப்ரல் 21 இறுதி அறிக்கை : அமைச்சரவையில் இன்று சமர்ப்பிப்பு

wpengine