உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி ஐ.நா.சுற்றாடல் மாநாட்டில் இன்று(14) விசேட உரை…

(FASTNEWS|COLOMBO) கென்ய ஜனாதிபதி உஹூரு கென்யட்டாவின் விசேட அழைப்பின் பேரில் கென்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று(14) ஐக்கிய நாடுகளின் சுற்றாடல் மாநாட்டில் கலந்துகொண்டு விசேட உரைநிகழ்த்தவுள்ளார்.

சுற்றாடல் சவால்களும் நிலையான நுகர்வு மற்றும் உற்பத்திக்கான புத்தாக்கத் தீர்வுகளும் எனும் தொனிப்பொருளில் கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா. சுற்றாடல் மாநாட்டின் நான்காவது அமர்வு நாளை வரை நடைபெறவுள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யட்டாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Related posts

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

wpengine

தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம்

wpengine

குப்பைகளை சேகரிக்கும் நேரத்தில் மாற்றம்

wpengine