உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி செயலாளர் பதவி விலகுவதற்கான காரணம் சைட்டம் விவகாரமே.. – GMOA

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தின் ஓர் கட்டமே ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அபயகோன் பதவி விலகுவதற்கான காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(03) குறித்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில், ஜனாதிபதியின் செயலாளர் வெளியிட்ட ஊடக அறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே ஜனாதிபதியின் செயலாளர் பதவி விலக ஏதுவாக அமைந்தது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

 

(rizmira)

Related posts

பிக்குவின் காவியுடையை சட்டத்தரணியால் அகற்ற முடியாது – மஹிந்த

wpengine

தரமற்ற எண்ணெய் குறித்து மீளவும் பரிசோதனை…

wpengine

மேலும் ஒருவருக்கு கொரோனா; 417 ஆக உயர்வு [UPDATE]

wpengine