உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்…

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஒன்றிணைந்த எதிரணியின் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நேற்றிரவு ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதுள்ளது

இந்தச் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும், ஒன்றிணைந்த எதிரணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

கூட்டணி ஒன்றை அமைப்பதே இந்தச் சந்திப்பின்நோக்கமாகும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்தார்.

Related posts

லசந்த படுகொலை தொடர்பில் ஆராய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணை குழு

wpengine

இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் களமிறங்க மோடிக்கு அழுத்தம்..!

wpengine

ரயில்வே வேலை நிறுத்தத்தில் உள்ள பணியாளர்களுக்கு மேலதிக பொது முகாமையாளர் எச்சரிக்கை..

wpengine