உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ஜூலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானம் – கெமுனு விஜேரத்ன

எதிர்வரும் ஜுலை மாதம் முதல் பஸ் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் கடந்த 02 ஆம் திகதி முதல் வட் வரி அதிகரிப்பை நடைமுறைப்படுத்தியதன் காரணமாக வாகன உதிரிப்பாகங்களின் விலையும் பாரியளவில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக தனியார் பஸ் உரிமையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், எனினும் தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கை காரணமாக ஜுலை மாதம் வரை கட்டணத்தை உயர்த்த முடியாதிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பஸ் கட்டண உயர்வுக் கொள்கையின் பிரகாரம் ஜுலை 15ஆம் திகதி முதல் பஸ் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட , முஸ்லிம்களின் ஆளும் கட்சி முஸ்லிம் காங்கிரஸ்தான் – ஹக்கீம்..!

wpengine

மங்களவின் சிறப்பு பண்டவரி குறைப்பு இதுவரையில் இல்லை.. – மக்கள் விசனம்

wpengine

வாக்குச்சீட்டுகள் அடங்கிய பொதி பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine