உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவு வழங்க அனுமதி வழங்குமாறு கோரிக்கை…

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வெளியில் இருந்து உணவை வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரி பொதுபலசேனா அமைப்பு உள்ளிட்ட சில அமைப்புக்கள் இன்று(01) சிறைச்சாலை ஆணையாளரிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.

மருத்துவ ஆலோசனைப்படி அவருக்கு முறையான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதால் குறித்த இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல்கந்த சுதந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இதனுடன் சிறைச்சாலையினுள் ஞானசார தேரருக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

Related posts

முச்சக்கர வண்டி உரிமையாளர்களது ஆர்ப்பாட்டத்தால் கடும் வாகன நெரிசல்..

wpengine

பேரூந்து கட்டணத்தை அதிகரிக்க ஒரு மாதகால அவகாசம் ..

wpengine

தன்னிச்சையானதும் சட்டவிரோதமானதுமான கைதுகளைத் தவிர்க்க ஒழுங்குமுறையை பின்பற்றுமாறு பரிந்துரை

wpengine