விளையாட்டு

டெஸ்ட் அரங்கில் மூன்றாவது இரட்டைச்சதத்தை விளாசிய முஷ்பிகுர்

(ஃபாஸ்ட் நியூஸ் | டாக்கா) – ஸிம்பாப்வேயிற்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம் அபார இரட்டைச்சதத்தை விளாசியுள்ளார்.

டாக்காவில் நடைபெறும் ஒற்றை டெஸ்ட் போட்டியில் ஸிம்பாப்வே முதல் இன்னிங்ஸில் 265 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பங்களாதேஷ் சார்பாக அணித்தலைவர் மொமினுல் ஹக் சதமடித்தார்.

அபாரமாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் டெஸ்ட் அரங்கில் மூன்றாவது இரட்டைச்சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 560 ஓட்டங்களை குவித்து ஆட்டத்தை நிறுத்தியது.

போட்டியில் பங்களாதேஷ் 286 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

Related posts

இலங்கையுடனான மோதலுக்கு பாகிஸ்தான் ஒருநாள் அணி அறிவிப்பு..

wpengine

அணிக்கு மேத்யூஸ் தலைவராக இருக்கும் வரை எனக்கு அணியில் இடமில்லை – போட்டுடைத்த தில்ஹார

wpengine

இங்கிலாந்து சுற்றிலிருந்து ஜெப்ரி வெண்டசே விலகல் – இலங்கை அணி பின்னடைவில்..

wpengine