Top Story 2உள்நாட்டு செய்திகள்

தடுப்பூசி தொடர்பிலான விளக்கம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஃபைசர் மற்றும் மொடர்னா கொவிட் -19 தடுப்பூசிகள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என இலங்கை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

குறித்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட மாணவர் நாட்டை விட்டு வெளியேறுகிறார் என்பதை நிரூபிக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிப்பது கட்டாயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூர் பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கு மொடர்னா அல்லது ஃபைசர் தடுப்பூசிகளை வழங்க இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று இராணுவத் தளபதி சுட்டிக்காட்டினார்.

Related posts

ஆஸிக்கு எதிரான இன்றைய போட்டியில் விக்கெட் காப்பாளராக குசல் மென்டிஸ்…

wpengine

சீருடையில் விளையாட்டுக் காட்டியவருக்குப் பிணை

wpengine

மேலும் 13 பேர் மீண்டனர்

wpengine