உள்நாட்டு செய்திகள்

தரம் ஐந்து புலமைப்பரிசில் தொகை 750 ரூபாயாக அதிகரிப்பு…

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இதுவரைக்காலம் வழங்கப்பட்டுவந்த, புலமைப்பரிசில் தொகையை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரைக்காலம் மாதம் ஒன்றுக்கு ரூ.500 வழங்கப்பட்டுவந்ததுடன், இந்த தொகையை 750 ரூபாயாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்த, விசேட தேவையுடைய 250 மாணவர்களுக்கு, புலமைப்பரிசில் நிதியை வழங்குவதற்காக, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில்…

wpengine

இலங்கையினை விட இந்தியா 229 ஓட்டங்களால் முன்னிலையில்….

wpengine

சீரற்ற காலநிலையினால் கரையோர ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine