Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் மீண்டும் திறக்கப்பட்டது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் இன்று(04) காலை 6 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் குறித்த பாலம் டிசம்பர் 08 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 09 மணி முதல், டிசம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06 மணி வரை மீண்டும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 09 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06 மணி வரை புதிய களனி பாலம் மூடப்படவுள்ளது.

பாலம் மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related posts

மஹானாம மற்றும் திஸாநாயக்கவுக்கு எதிரான விசாரணைகள் நிறைவு

wpengine

ஜனாதிபதி ஐ.நாவின் 76வது தொடரில்

wpengine

ஜனாதிபதியின் விருப்பத்துடன் தனது அமைச்சு பதவியில் மாற்றம் ஏற்படுமானால் ஏற்பேன் – மஹிந்த…

wpengine