உலக செய்திகள்

தாய்வான் ரயில் விபத்தில் பலர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  தாய்வான்) – தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைதுங் நோக்கி பயணிக்கும் இந்த ரயில், ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 20 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ரயில் சுமார் 350 பேரை ஏற்றிச் சென்றதாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

ட்ரம்ப்பின் சமூக வலைதள பக்கங்கள் முடக்கம்

wpengine

எகிப்தின் முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை

wpengine

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு ஒரு போதும் அனுமதிக்காது..

wpengine