உள்நாட்டு செய்திகள்

துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு…

ஹொரவப்பொத்தனை, வாகொல்லாகட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிவில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவரின் துப்பாக்கி தவறுதலாக இயங்கியதில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

நேற்று(18) நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹொரவப்பொத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரவப்பொத்தனை, திவுல்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ​பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

மின்சார சபை – எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் 4000 ஊழியர்களுக்கு தட்டுப்பாடு..!

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 05% இற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்களது கட்டுப்பணம் அரசுடமைக்கு…

wpengine

மேலும் 27 பேர் கைது

wpengine