உலக செய்திகள்

தென்னாப்பிரிக்கா ஜனாதிபதியாக சிரில் ரமபோசா மீண்டும் தேர்வு

(FASTNEWS|COLOMBO) தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்வு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்னாப்பிரிக்கா குடியரசு நாட்டின் பாராளுமன்றத்துக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் ஜனாதிபதியாக சிரில் ரமபோசாவை பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்வு செய்தனர்.

ஜனாதிபதி பதவிக்கு சிரில் ரமபோசாவை தவிர வேறு யாரும் நிறுத்தப்படாத நிலையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிரில் ரமபோசா வெற்றிபெற்றதாக இந்த தேர்தலை மேற்பார்வையிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மோகோயேங் அறிவித்துள்ளதக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்

wpengine

சிரிய குழந்தைகளின் அழுகுரல் உலக நாடுகளுக்கு கேட்பதில்லையா – பிறந்தநாளில் மலாலா வேதனை

wpengine

ஜப்பானில் சுமார் இதுவரை 100 பேர் பலி…

wpengine