உள்நாட்டு செய்திகள்

தேர்தலின் மேலதிகப் பாதுகாப்புக்கு இராணுவ உதவி வழங்கத்தயார் – இராணுவ ஊ.பேச்சாளர்

தேர்தல் காலப்பகுதியில் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாப்பற்காக  காவல்துறையினர் கோரிக்கை விடுத்தால் அவர்களுக்கு ஆதரவு வழங்க இராணுவப் படை குழுக்கள் எந்நேரத்திலும் ஆயத்தமாக இருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் பிற பகுதிகளில் அமைந்துள்ள இராணுவ முகாம்களில் ஆயத்தமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் ஏனைய தேர்தல்களை போன்று இம்முறை தேர்தலிலும் அவசியம் ஏற்பட்டால் இராணுவ ஆதரவு பெற்று கொள்ளப்படும் என பொலிஸ்மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இராணுவ பிரதானியுடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

(riz)

Related posts

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

wpengine

கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று

wpengine

பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்பான பரிசீலனை

wpengine