உள்நாட்டு செய்திகள்

தேர்தலில் ஜாதிக பலயவில் களமிறங்குகிறாரா மஹிந்த?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத பட்சத்திலேயே மஹிந்த இவ்வாறு ஸ்ரீலங்கா ஜாதிக பலயவில் களமிறங்கவுள்ளார்.

தேசபிரேமி ஜாதிக பெரமுன என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த கட்சியே ஶ்ரீலங்கா ஜாதிக பலயவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் நெருங்கிய சகாவான பியசிறி விஜேநாயக்காவே இக்கட்சியின் செயலாளராவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழில் வாழ்த்து தெரிவித்த நாமல் ராஜபக்ஸ

wpengine

கடல் மார்க்கமாக வெளிநாடு செல்ல முயற்சித்தோர் கைது

wpengine

இந்திய பிரதமர் இன்று அநுராதபுரத்திற்கு விஜயம்

Azeem Kilabdeen