Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாடு முழுவதும் பதிவாகிய மின் தடைகள் – மின்சார சபையின் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (01) பிற்பகல் 5 மணிவரை நாடு முழுவதும் 70,012 மின்சார தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில், 41,684 மின்சார தடைகள் சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்தார்.

மீதமுள்ள மின்சார தடைகளை விரைவாக சரிசெய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக மேலதிக குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் குத்திக் கொலை

wpengine

தேசிய லொத்தர் சபை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு..

wpengine

பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் ஜூலையில்…

wpengine