Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னிறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை 685 ரூபாவால் அதிகரிப்பு..!

wpengine

AIDS நோயென சந்தேகித்த மாணவனுக்கு ஆனந்த கல்லூரி அல்லது கிங்ஸ்வுட் கல்லூரிக்கு சேர்க்குமாறு ஆலோசனை

wpengine

கோட்டா  ஒருபோதுமே வெல்லமாட்டார் – றிஷாட்

wpengine