உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை…

நாட்டின் பல பகுதிகளில் இன்று(11) இடி மின்னலுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ , மத்திய, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலேயே மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியகூறுகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்னல் தாக்கங்களின் போது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், மின் உபகரண பயன்பாட்டினை தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தொடரும் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

wpengine

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்தக் கோரிக்கை

wpengine

கண்காணிப்பு தகவல்கள் திங்களன்று

wpengine