உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று(04) மழையுடன் கூடிய காலநிலை…

(FASTNEWS-COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

தென், சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுடன் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

மேலும், இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான கடும் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுடன் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களில் இடைக்கிடையில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பங்களாதேஷ் அணிக்காக தனது அர்ப்பணிப்பு குறித்து வெல்லவராயன் கருத்து…

wpengine

PCR மேற்கொள்ள போவதாக கூறி தங்கம் கொள்ளை

wpengine

கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றார் முஜிபுர்..!

wpengine