உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை…

(FASTNEWS|COLOMBO)- இடைப்பருவப்பெயர்ச்சி காலநிலையின் தாக்கம் காரணமாக நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் தினைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று(22) 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் பாதிப்புக்களைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

Related posts

245 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

wpengine

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 3729 முறைப்பாடுகள்

wpengine

ஆசியாக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் லசித் மாலிங்க… ( அணி விபரம்)

wpengine