உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் குளிரான வானிலை…

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் குளிரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்திலும் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, புத்தளம், கேகாலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படல் வேண்டும் – பிரதமர்

wpengine

பூஸ்டருக்கு WHO அனுமதி

wpengine

தற்கொலையை அனுமதித்து புதிய சட்டம், அமைச்சரவை அங்கீகாரத்துடன்..

wpengine