உள்நாட்டு செய்திகள்

நாட்டுக்கு டொலர் வருமானால் பிசாசு பிரதமரானாலும் ஆதரிப்போம்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகம் முடிவுக்கு கொண்டுவரப்படுமானால், பிசாசு பிரதமராக இருந்தால்கூட ஆதரவு வழங்கியாக வேண்டும் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எம். சந்திரசேன  தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கப்படுமா என இன்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

பிரதமர் ரணிலின் அரசியல் கொள்கையுடன் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அவருக்கு சர்வதேச தொடர்பு உள்ளது.

அவரால் அந்த தொடர்பை பயன்படுத்தி நாட்டுக்கு டொலர் வருமானால், வரிசை யுகத்துக்கு முடிவு கட்டப்படுமானால், எரிபொருள் வழங்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

அதோடு இந்த வேலையை ஒரு பேய் செய்தால்கூட ஆதரவு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்த  எஸ்.எம். சந்திரசேன, எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்டுக்காக சவாலை ரணில் ஏற்றுக்கொண்டுள்ள வரவேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Related posts

08 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

wpengine

பரீட்சைகள் தொடர்பிலான அறிவிப்பு

wpengine

சந்திம விஜயசிறி நீதிமன்றில் ஆஜர்..

wpengine