விளையாட்டு

நானும் சங்காவும் ஓய்வு பெற்றதா தோல்விக்கு காரணம் – மஹேல கேள்வி

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு குறித்த தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார் இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜெயவர்தன.

இந்தியாவில் நடந்து வரும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மோசமாக ஆடிய இலங்கை அணி சூப்பர்-10 சுற்றோடு வெளியேறியது.

இந்நிலையில் டுவிட்டரில் இலங்கை அணி குறித்த ரசிகர்களின் கேள்விக்கு அந்த அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே பதிலளிக்கையில்;

அப்போது ஒரு ரசிகர், “நீங்களும், சங்கக்காரவும் அணியை பற்றி யோசிக்காமல் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுவிட்டீர்கள்” என்று வருத்தப்பட்டார்.

இதற்கு ஜெயவர்த்தனே, “சங்கக்காரவும், நானும் 2 வருடங்களுக்கு முன்பே டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டோம்.

அணியை வலுப்படுத்த போதுமான நேரம் இருந்தும் இலங்கை அணி கோட்டை விட்டுவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜெயவர்த்தனேவின் ஆதங்க டுவிட்டுகள் வாசகர்களுக்காக;

mahela

maheka-tweet

Related posts

2019 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சதங்கள் பட்டியலில் இலங்கை இறுதி இடத்தில் 

wpengine

திரிமன்ன கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் – பிரபல வீரர் கோரிக்கை..

wpengine

நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

wpengine