உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமலினை பிணையில் எடுக்கத்தயார் இல்லை – மஹிந்த (VIDEO)

நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்கப்பட்டமைக்கு எதிராக தற்போது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், 18 ஆம் திகதி காத்திருப்பதாகவும் அவரது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்சவை வெலிகடை சிறையில் சென்று சந்தித்து விட்டு, வெளியில் வரும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசியல்வாதிகளே யாரை எப்போது கைது செய்ய போகின்றனர் என்பதை கூறுகின்றனர். இதுதான் மாற்றம்.

இதற்கு மேலான வெற்றி ஒன்றை நாங்கள் பெற்றிருக்கின்றோம். விமல் வீரவன்ஸ பெறுமதி சேர் வரி அதிகரிப்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் அதனை தற்காலிமாக இடைநிறுத்தியுள்ளது.

அத்துடன் நாமல் ராஜபக்ச கைது செய்யப்பட்டமையானது முழுமையான அரசியல் பழிவாங்கல். இதனை நாங்கள் அறிவோம். முஸம்மில் இன்னும் சிறையில் இருக்கின்றார்.

அரசாங்கம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறினாலும் எல்லோருக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நாங்கள் காண்கின்றோம் என்றார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=CNsaONc9RN0″ width=”560″ height=”315″]

Related posts

பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக பதவியேற்றார் டாக்டர் ஆரிப் ஆல்வி…

wpengine

ஒரு சில வைத்தியசாலைகளில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

தாதியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்றுடன்(28) நிறைவு…

wpengine