உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 06 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஆறு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக 15 பில்லியன் ரூபா பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே குறித்த இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கவர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐவர் இணைந்து, கவர்ஸ் கோப்ஸ் நிறுவனத்தில், 15 பில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆறு பேருக்கும் எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

####

Related posts

வரவு செலுத்திட்ட 2ம் வாசிப்பு மீதான விவாதம்

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஜூலை மாதம் வரை பிற்போடு

wpengine

15 தொழிலாளர்கள் வைத்தியசாலையில்…

wpengine