உள்நாட்டு செய்திகள்

நாளை தளர்த்தபடவுள்ள ஊரடங்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களில் நாளை காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு, மீண்டும் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது

இவ்வாறு எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதிவரை வரும் மூன்று நாட்களுக்கு இதேபோன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளத்தப்பட்டு மீண்டும் அன்றைய இரவு 8 மணிக்கு ஊரடங்கு அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்க்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கருமலையூற்று மீனவர் பிரச்சினை ; விமானப்படைத் தளபதியுடன் எம் எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு

News Editor

மங்களூருவில் 38 இலங்கை தமிழர்கள் கைது

wpengine

பொலிஸ் உயரதிகாரிகள் 53 பேருக்கான இடமாற்றம் இரத்து…

wpengine