உள்நாட்டு செய்திகள்

நாளை 24 மணித்தியால நீர் விநியோகம் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – திருத்தப் பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை 24 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை காலை 8.00 மணி முதல் நாளை மறுதினம் காலை 8.00 மணி வரையில் நீர் விநியோகம் இடை நிறுத்தப்படவுள்ளது.

அதன்படி பேலியகொடை, வத்தளை, மாபோல, ஜா-எல மற்றும் கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பிரதேசம், களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே மற்றும் ஜா-எல பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும், கம்பஹா பிரதேச சபை பகுதியில் ஒரு பிரதேசத்திலும் இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஜனாதிபதி மற்றும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் சந்திப்பு இன்று

wpengine

இன்று முதல் இலவச PCR பரிசோதனை

wpengine

மஹிந்த ராஜபக்ஸவுடனான சந்திப்பிற்கு ஜனாதிபதி அனுமதி…

wpengine