உள்நாட்டு செய்திகள்

நாளை 24 மணி நேர நீர்வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(13) காலை 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி பேலியகொடை, வத்தளை – மாபோலை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், களனி பிரதேச சபையின் எந்தலை, எலக்கந்தை மற்றும் பல்லியாவத்தை ஆகிய பகுதிகளிலும் குறித்த நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் பியகம பிரதேச சபையின் மஹூருவில வீதி, விஜேராம மாவத்தை, கே.ரீ பெரேரா மாவத்தை, கோனவல, பமுனுவில மற்றும் பத்தலஹேனவத்த ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

Related posts

அரச அலுவலக கடமை நேரங்களில் திங்கள் முதல் மாற்றம்..

wpengine

20 குறித்து ஹெல உறுமய’வின் நிலைப்பாடு இன்று(28)…

wpengine

டி.வி.உபுல் விளக்கமறியலில்

wpengine