Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு தீ வைப்பு; சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலகக் கட்டிடத் தொகுதிக்கு தீ மூட்டியமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று நீதவான் M.H.M.ஹம்சா முன்னிலையில், மெய்நிகர் தொழில்நுட்பத்தினூடாக இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர்களை எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை துரிதப்படுத்துமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இன்று(31) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் மருத்துவமனையில்…

wpengine

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜர்

wpengine

மேலும் 29 பேர் கைது

wpengine