Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று 586 கொரோனா நோயாளர்கள் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9791 எ அதிகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் 586 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 115 பேருக்கும், பேலியகொடை மீன் சந்தையுடன்; தொடர்புடைய 467 பேருக்கும், நாடு திரும்பிய கடலோடிகள் 4 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 5,630 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பிரித்தானிய அமைச்சரின் இலங்கைக்கான பயணம் இரத்து..

wpengine

சட்டவிரோத மதுபான விநியோகம் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம்

wpengine

IMF ஒப்பந்தம்அவசியம் இல்லை

wpengine