உலக செய்திகள்சூடான செய்திகள்

பதற்றம் தணியாத நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதையடுத்து அங்குள்ள பதற்றம் தணியாத நிலையில், இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகின்றது.

பல்வேறு கட்டுப்பாடுகள், ஊரடங்கு உத்தரவுகள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீட்டுக் காவலுக்கு மத்தியில், உள்ளாட்சி அமைப்புகளில் ஒன்றான பஞ்சாயத்து தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அந்தவகையில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 316 பஞ்சாயத்துகளில், 310 பஞ்சாயத்துளில் தேர்தல் நடத்தப்படுகிறது.

Related posts

வீடியோ கேம் போட்டியில் தோல்வி அடைந்ததால் துப்பாக்கிச் சூடு – 4 பேர் பலி…

wpengine

அரசியலமைப்புச் சபை சம்பந்தமான விவாதம் இன்று(21)…

wpengine

அப்பிள் கணக்கு கடவுச்சொல்லை சமர்ப்பிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அர்ஜுன் அலோசியசிடம் பணிப்பு

wpengine