உள்நாட்டு செய்திகள்

பதுளையில் ஹெரோயினுடன் இருவர் கைது…

பதுளை – ஹிதகொட பிரதேசத்தில் நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 02 கிராம் 660 மில்லி கிராம் ஹெரோயினுடன் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தினை சேர்ந்த 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பதுளை -பதுளுபிடிய விளையாட்டரங்கில் 02 கிராம் 640 மில்லி கிராம் ஹெரோயினுடன் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது செய்யப்பட்ட இருவரும் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

மறைந்த சோபித தேரரின் நல்லடக்கம் குறித்த ஆசை நிறைவேறப்பட்டதா

wpengine

இலங்கை அணி தோற்றால், தென்னாபிரிக்க அணி தரவரிசையில் முதலிடத்திற்கு…

wpengine

1000 ரூபா சம்பள விவகாரம்: பெருந்தோட்ட கம்பனிகளின் மனு தள்ளுபடி

wpengine