Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டின் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்களாதேஷ் வீழ்த்தி, நியூசிலாந்து தொடரை முழுமையாக கைப்பற்றியது…

wpengine

நண்பகல் 12 மணி வரை பதிவான வாக்குப்பதிவு

wpengine

தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் இன்று சமர்ப்பிக்கப்படாது – அமைச்சர் கயந்த

wpengine