உள்நாட்டு செய்திகள்

பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டை…

இலங்கை போக்குவரத்து சபை – தனியார் பஸ் மற்றும் ரயில் பயணிகளுக்கு இலத்திரனியல் அட்டையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த டச் அட்டையை பயணிகளினால் கொள்வனவு செய்ய முடிவதுடன் பஸ் அல்லது ரயில்களில் பயணிக்கும் பொழுது பயண கட்டணம் இந்த அட்டையில் குறைத்துக் கொள்ளப்படும்.

போக்குவரத்து ஆணைக்குழுவும் திறைசேரியும் இலங்கை மத்திய வங்கியும் இலங்கை பேய் (Pay) நிறுவனமும் ஒன்றிணைந்து குறித்த அட்டையை தயார் செய்வதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர தெரிவித்தார்.

இந்த இலத்திரனியல் அட்டை முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் பயணிகளுக்கு மிகுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரச்சினையை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஜி.பி.ஹேமசந்திர மேலும் கூறினார்.

Related posts

உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அடுத்த மாதம் வெளியிடப்படும்…

wpengine

சுவிஸ் தூதரக சம்பவம் திட்டமிட்ட நாடகம் – அமைச்சர் அமரவீர

wpengine

கிளிநொச்சி ஜேர்மன் பயிற்சி நிறுவனத்துக்கு 110 மில்லியன் நவீன உபகரணங்கள்

wpengine