ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு ஹரின் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்படாவிடில் பாரிய எதிர்க்கட்சிக் கூட்டணியொன்றை அமைப்பது தொடர்பில் சிந்தித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகி சஜித் பிரேமதாசவுக்கு அதனை வழங்காவிடில் இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்,

ஆனால் தமது கூட்டணியில் உள்ளடங்கியுள்ள கட்சிகள் தொடர்பில் தற்போது பகிரங்கப்படுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியினால் தற்போது சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பெயரிடப்பட்டுள்ளதுடன் பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் கட்சித் தலைமைப் பதவி வழங்கப்படாவிட்டால் தாம் பிரதமர் வேட்பாளர் பதவியை ஏற்கப் போவதில்லை என சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சில அமைச்சர்களுக்கான விசேட பாதுகாப்பு நீக்கம்…

wpengine

சர்ச்சைக்குரிய பிணை முறி குறித்த இறுதி அறிக்கையில் தாமதம்…

wpengine

ஒரே நேரத்தில் 9 மாகாணங்களில் தாக்குதல் – சிங்கள ஊடகங்கள் மேற்கோள் காட்டும் ‘அபூ இனது பின்னணி

wpengine