உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிற்கு விஜயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள அவர், 11ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயம் இலங்கை மற்றும் இந்தியாவின் உயர்மட்ட பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும் என இந்திய வெளியுறவு  அமைச்சு தெரிவித்துள்ளது

புதுடெல்லி தவிர்ந்து வாரணாசி, சாரநாத், போத் கயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களுக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ செல்லவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

இந்த விஜயத்தின் போது, இலங்கை தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படும் என நம்பப்டுகின்றது

Related posts

அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்.

wpengine

இரு வாரங்களில் அரிசி விலை குறையும்..

wpengine

9A சித்தி பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு..!

wpengine