உள்நாட்டு செய்திகள்

இரண்டு பிள்ளைகளும் உயிரிழப்பு – தாய் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் விபத்தில் மரணித்த பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த நபர் ஒருவரின் மனைவி, தனது 04 வயது பெண் பிள்ளை மற்றும் 02 2 1/2 வயது ஆண் பிள்ளை ஆகியோரை கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார்.

அத்துடன், தானும் கிணற்றுக்குள் குதிக்க முயன்ற நிலையில் அயலவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

எனினும், இரண்டரை வயது மகன் கிணற்றுக்குள்ளே மரணித்துள்ளதுடன், மீட்கப்பட்ட 4 வயது பெண் குழந்தை அம்பியுலன்ஸ் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, தாயை கைதுசெய்யது நெடுங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

காஞ்சிபான இம்ரானை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த கோரிக்கை

wpengine

ஓய்வூதியத் திணைக்களத்தின் அறிவிப்பு

wpengine

ஐ.தே.க. உறுப்பினர் கபில அமரகோன் உயிரிழப்பு,..

wpengine