Top Story 2உள்நாட்டு செய்திகள்

புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் வியாழனன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  புதிய அரசின் கொள்கைப் பிரகடனத்தை எதிர்வரும் 20ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20ம் திகதி முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் தேர்வு உட்பட ஆரம்பகட்ட சபை நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், பாராளுமன்றம் பிற்பகல் 3.00 மணிவரை சபாநாயகரால் ஒத்திவைக்கப்படும்.

இதன்பிரகாரம் பிற்பகல் 3.00 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடும். இதன்போதே ஜனாதிபதியால் புதிய அரசின் கொள்கைப் பிரகடனம் முன்வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மஹிந்த தோல்வியடையும் போது இலங்கை வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடாக இருந்தது – நாமல்..!

wpengine

2019ம் ஆண்டின் வரவு – செலவுத் திட்டம்… (முழு விபரம்)

wpengine

இன்றிலிருந்து கடுமையாகும் பயணக்கட்டுப்பாடுகள்

wpengine