உள்நாட்டு செய்திகள்

புத்தாண்டு காலப்பகுதியில் மேலதிகமாக 2 ஆயிரம் பஸ்கள் சேவையில்…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் செல்லும் பொதுமக்களின் வசதி கருதி, இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த உள்ளது.

இதற்கு தேவையான மேலதிக பஸ்கள், நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எதிர்வரும் 6ம் திகதி முதல் 24ம் திகதி வரையில் குறித்த பஸ் சேவைகள் இடம்பெறும் எனவும் கொழும்பு புறக்கோட்டை மத்திய பஸ்தரிப்பு நிலையம், மற்றும் பிரதேச அலுவலகங்களில் முன்னெடுக்கப்படும் என்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட 103 டிப்போக்களை உள்ளடக்கிய வகையில், இந்த விசேட பஸ்சேவைகள் இடம்பெறும்.

மேலும், நிறுவன வலயத்திற்கு அருகாமையில் குறித்த பஸ் சேவை முன்னெடுக்கப்படும் என்று பிரதிப் பொது முகாமையாளர் பி.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி

wpengine

உதய கம்மன்பிலவின் தாக்கல் செய்த அடிப்படை மனு விசாரணைக்கு..

wpengine

ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாதிபதி இடையில் விசேட கலந்துரையாடல்..

wpengine