உள்நாட்டு செய்திகள்

புஸ்ஸலாவில் திடீர் தீ விபத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –புஸ்ஸலாவ பகுதியில் நேற்று மாலை திடீர் தீ விபத்தில் அச்சகம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச பொது மக்கள், இளைஞர்கள் ஆகியோர் இணைந்து ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை புஸ்ஸலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

 

Related posts

பெற்றோலியக் கூட்டுத்தாபன முக்கியஸ்தர்களுக்கு பொதுமக்களின் வரிப்பணத்தில் ஐபோன் கொள்வனவு!!!

Azeem Kilabdeen

பொதிகளுக்கான புகையிரத கட்டணம் 50%ஆல் அதிகரிப்பு

wpengine

உடன் அமுலாகும் வகையில் முடக்கம்

wpengine