உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை…

நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் சீரான வானிலை தொடர்ந்தும் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும், தென் மாகாணத்திலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இன்று நண்பகல் 12.08 அளவில் பூஸா, அக்மீமன, அக்குரஸ்ஸ, கம்புறுப்பிட்டிய, ஹக்மன மற்றும் தெனகம ஆகிய நகரங்களுக்கு அண்மையிலுள்ள பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் தென் கடற்பரப்புகளின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யககூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சீரான வானிலை நிலவும் .

Related posts

ஷான் புதா பிணையில் விடுவிப்பு

Azeem Kilabdeen

கடும் மழையினால் வாகன நெரிசல்

wpengine

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இராணுவ விசாரணைகள் எதுவும் இல்லை – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க..

wpengine