உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான பிரதேசங்களில் வெப்பமான காலநிலை…

(FASTNEWS-COLOMBO) நாளை(07) பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்கள் புத்தளம் மற்றும் ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் வெப்பமான காலநிலை நிலவ கூடும் என எதிர்வு கூறியுள்ளது.

இதன் காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வெப்பமான வானிலையினால், அதிக களைப்பு உள்ளிட்ட உடலியலில் மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதனால், போதுமான அளவு நீரை அருந்துமாறும், சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

காலி கிந்தொட்டை சம்பவம் – இழப்பீடு வழங்க நடவடிக்கை…

wpengine

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஒருவருக்கும் கொரோனா

wpengine

இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கை மாணவர்கள் [PHOTOS]

wpengine