ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பொன்சேகா – தெவரப்பெரும முரண்பாட்டிற்கு தீர்வு ரணிலின் தலையீடே…

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியமான பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் பொன்சேகா- பாலித தெவரப்பெரும இடையில் அண்மைக் காலமாக இடம்பெற்று வரும் கடும் முரண்பாட்டு நிலைமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவிக்கப்படும் என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

சகோதர நாளிதழ் ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த முரண்பாட்டு நிலைமையினை சிலர் தங்களது அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்ளக் கூடும் எனவும் இதனால் உடனடியாக பிரச்சினையை தீர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் பிரச்சினைகள் இருந்தால் அது குறித்து கட்சித் தலைவரிடம் முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சர் அமரதுங்க வலியுறுத்தியுள்ளார்.

Related posts

உலகின் மிக நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் திறந்து வைப்பு

wpengine

கொழும்பு தேசிய வைத்தியசாலை பகுதியில் பதற்றம்

wpengine

மைத்திரி – சந்திரிகா ஒரே வைபவத்தில் நேருக்கு நேர் சந்திப்பு.. ஜனாதிபதியின் முகத்தினை பார்க்காது வெளியேறினார்…

wpengine