உள்நாட்டு செய்திகள்

பொலிஸார் மீது டிப்பர் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹக்மன கோன்ஹல பகுதியில் வீதித் தடை போடப்பட்ட பகுதியில் டிப்பர் வண்டி மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை டரக் வண்டி மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன், தொடர்புடையவர்களை கைதுசெய்ய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

போதைப்பொருளுடன் இரண்டு இந்தியப் பிரஜைகள் கைது…

wpengine

அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற ஐந்து ஆண்டுகால விடுமுறை வழங்கப்படும் – பிரதமர்

wpengine

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சுப் பொறுப்புக்கள் சுசிலுக்கு கிடைக்கவில்லை

wpengine