உள்நாட்டு செய்திகள்

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ரிஷாட் கடும் கண்டனம்!

காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர் கானின் கட்சிக் காரியாலயம் இன்று அதிகாலை(27) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, அமைச்சர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளர்.

இந்தச் செயல் தொடர்பாக பொலிஸ் உயரதிகாரியுடன் தொடர்புகொண்ட அமைச்சர் ரிஷாட், சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களைக் கைது செய்யுமாறும், அந்தப் பிரதேசத்திலுள்ள தமது கட்சிக் காரியாலயங்களுக்குத் தக்க பாதுகாப்பு வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

கிழக்கில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத தீய சக்திகள், திட்டமிட்டு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று குற்றஞ்சாட்டிய அவர், எத்தனை தடைகள் வந்தாலும் எமது அரசியல் நடவடிக்கைகளை நாங்கள் ஒருபோதும் கைவிடப் போவதில்லை என்றும் கூறினார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

அஸ்ட்ரா செனெகா வருவதில் தாமதமில்லை

wpengine

மீள்சுழற்சி மையத்துக்கு குப்பைக் கூளங்களை கொண்டும் செல்லும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine

இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்

wpengine